விழுப்புரம்

 காரில் மதுப்புட்டிகளை கடத்தியவர் கைது

DIN

கோட்டக்குப்பம் அருகே காரில் மதுப் புட்டிகளை கடத்திய நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 விழுப்புரம் மாவட்ட மது விலக்குப் பிரிவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன், காவலர் அழகுவேல் உள்ளிட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை
 பிற்பகல் கோட்டக்குப்பம் சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனையிட்டனர்.
 அதில், விலையுயர்ந்த 72 புதுச்சேரி மதுப்புட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம்.
 இது தொடர்பாக, காரில் இருந்த மரக்காணத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி(65) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
 அதில், மதுப் புட்டிகளை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, சொகுசு கார், மது புட்டிகளை பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவிந்தசாமியை மது விலக்கு போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT