விழுப்புரம்

செஞ்சி பகுதியில் பரவும் தோல் ஒவ்வாமை நோய்!

DIN

செஞ்சி பகுதியில் பரவும் தோல் ஒவ்வாமை காரணமாக, செஞ்சி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களில் பொது மக்கள் பலரும் சிகிச்சைபெற்றனர்.
 செஞ்சி மற்றும் செஞ்சியைச் சுற்றியுள்ள அப்பம்பட்டு, கோணை, செவலரை, மேல்எடையாளம் உள்ளிட்ட கிராமங்களில் மாணவ, மாணவிகள், பெண்கள், பெரியவர்கள் என பலருக்கும் உடலில் தோல் ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கை மற்றும் கால், முதுகுப் பகுதிகளில் வீக்கம் காணப்படுகிறது.
 செஞ்சி அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கும் இவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 இதுகுறித்து அரசு மருத்துவமனை வட்டாரத்தில் கூறியதாவது: கடந்த இருநாள்களில் தோல் ஒவ்வாமை பாதிப்பு காரணமாக பலர் சிகிச்சை பெற்றனர். கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழை காரணமாக இந்நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
 இதுகுறித்து, தலைமை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT