விழுப்புரம்

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ மிதி விழா

DIN

சின்னசேலம் வட்டம், கச்சிராயப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பருவதராஜகுமாரி (எ) ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ மிதி விழா புதன்கிழமை நடைபெற்றது.
 கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்1) காலை 10 மணிக்கு அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்தனர். பின்னர், காப்பு கட்டுதல் நடைபெற்றது. புதன்கிழமை மயானக் கொள்ளை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நடைபெற்றது.
 மாலை தீ மிதி விழா நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT