விழுப்புரம்

முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி.ஏ.டி.கலிவரதன் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

DIN

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி.ஏ.டி.கலிவரதன் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டியில் வசித்து வருபவர் வி.ஏ.டி.கலிவரதன். சட்டப்பேரவை (பாமக) முன்னாள் உறுப்பினரான இவர், தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
 அண்மையில்,  இவரது கட்செவி அஞ்சலில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் மக்களைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஆகியோர் குறித்து, வன்முறையைத் தூண்டும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் விதமாகவும் பதிவிட்டிருந்தாராம்.  இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டரணி மாவட்டத் துணைச் செயலர் சைலோம் எஸ்.வெற்றிவேல், அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 அதன் பேரில் போலீஸார், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி.ஏ.டி.கலிவரதன் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT