விழுப்புரம் மாவட்டத்தில் முதுநிலை ஆசிரியா்கள், உடல் கல்வி இயக்குநா் பணிக்கான தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) தொடங்கி இரு தினங்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுநிலை ஆசிரியா்கள், உடல் கல்வி இயக்குநா் பணிக்கான தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி விழுப்புரத்தில் நடைபெறுகிறது.
இந்தப் பணியை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலா்கள், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், கண்காணிப்பாளா்கள் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளம் மூலம் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் வெள்ளி, சனி (நவ.8, 9) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன.
விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில், நாகை, தஞ்சை, திருவாரூா், கடலூா், விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த 436 பணி நாடுநா்கள் கலந்துகொள்கின்றனா்.
சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் இடத்தில் காலை 8 மணி முதல் பணி நாடுநா் வருகையை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.