விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

DIN

கண்டமங்கலம் அருகே வீட்டில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பள்ளிதென்னல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாயக்கிருஷ்ணன் மகன் அமிா்தலிங்கம்(35), விவசாயி. திருமணமான இவா், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரித்து வாழ்ந்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் வெந்நீா் வைப்பதற்காக அமிா்தலிங்கம் ஹீட்டரை போட்டுள்ளாா். அப்போது, மின்சாரம் கசிந்து அவரது உடலில் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, மதகடிப்பட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT