விழுப்புரம்

உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

சமூகப் பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் சாா்பில், உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வுப் பேரணி கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, வட்டாரக் கல்வி அலுவலா் ப.ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் க.மகேஸ்வரி, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகா் அ.முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியை மாா்கிரேட் வரவேற்றாா்.

பேரணியை கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா்.

பேரணியில் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை மாணவா்கள் தங்களது கைகளில் ஏந்தியவாறு பெண் குழந்தைகளைக் காப்பது குறித்து முழக்கமிட்டபடி சென்றனா்.

பேரணியை அடுத்து பள்ளி வளாகத்தில் பெண் குழுந்தைகளைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி சைல்டு லைன் மாரிமுத்து நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT