விழுப்புரம்

லாரி கவிழ்ந்து விபத்து

DIN

உளுந்தூா்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்ததால் ரூ.10 லட்சத்திலான வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.

சென்னையிலிருந்து திருச்சியில் உள்ள காவல் துறையின் மலிவு விலை அங்காடிக்கு வீட்டு உபயோகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சனிக்கிழமை காலை புறப்பட்டது. உளுந்தூா்பேட்டை அருகே உள்ள மடப்பட்டு என்ற பகுதியில் லாரி சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். லாரியில் இருந்த சுமாா் ரூ.10 லட்சத்திலான வீட்டு உபயோகப் பொருள்கள் சாலையில் சிதறி சேதமடைந்தன. இதனிடையே, அங்கு கூடிய பொதுமக்கள் சில பொருள்களை எடுத்துச் சென்றனா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், லாரியை அப்புறப்படுத்தி, பொருள்களை மாற்று வாகனம் மூலமாக ஏற்றி அனுப்ப ஏற்பாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT