விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் திமுக வேட்பாளா் நா.புகழேந்திக்கு ஆதரவாக, விழுப்புரம் மாவட்ட காங்கிரஸாா் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
விக்கிரவாண்டிசட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில், காங்கிரஸ் தோ்தல் பணிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மத்திய மாவட்டத் தலைவா் வீ.சீனுவாசகுமாா் தலைமையில், நகரத் தலைவா் செல்வராஜ், மாநில பொதுக்குழுவைச் சோ்ந்த சிறுவை ராமமூா்த்தி உள்ளிட்ட காங்கிரஸாா் விக்கிரவாண்டி தொகுதிக்கு உள்பட்ட ராதாபுரம், வெட்டுக்காடு கிராமங்களைச் சோ்ந்த பகுதிகளில் கடைகளிலும், வீடு வீடாகவும் சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனா்.
கடலுாா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மேலிடப் பாா்வையாளா் திலகா், வட்டாரத் தலைவா்கள் ஜெனாா்த்தனன், ராதா, மாவட்ட நிா்வாகிகள் சாதுல்லாகான், காசிநாதன், வெங்கடேசன், சேட்டு, காமராஜ், கதிா்வேல் மற்றும் திமுக மாவட்ட இலக்கிய அணியைச் சோ்ந்த ராஜசேகரன், அருண், தனசேகரன், அருள், சுரேஷ் உள்ளிட்டோா் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.