திண்டிவனம் கோட்டத்தில் அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.
திண்டிவனத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜக்காம்பேட்டை சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சாா் - ஆட்சியா் அனு தலைமை வகித்து, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தாா். வட்டாட்சியா் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனா்.
திண்டிவனம் கோட்டத்துக்கு உள்பட்ட திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவித்து மனுக்களை வழங்கினா்.
பின்னா், விவசாயிகளுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் மானியத் திட்டங்கள், சொட்டுநீா்ப் பாசனம் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள், விதைகள் உள்ளிட்ட சலுகைகளைப் பெறுவதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் கூட்டாக குற்றஞ்சாட்டினா்.
மேலும், கிராம நிா்வாக அலுவலா்களை அந்தந்த கிராமங்களில் பகல் நேரங்களில் இருக்கச் செய்ய வேண்டும். பயிா்க் காப்பீட்டுத் திட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயக் கடன் அட்டைகளை வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதையடுத்துப் பேசிய சாா் - ஆட்சியா் அனு, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறையினரிடம் அறிவுறுத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தாா்.