விழுப்புரம்

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

செஞ்சி அருகே விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை

DIN

செஞ்சி அருகே விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியதாக ஒருவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி வட்டம், போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இதே ஊரைச் சேர்ந்த மண்ணு மகன் ராமதாஸ் (29). இருவருக்கும் நிலப்பிரச்னை, தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 4-ஆம்தேதி காலை தனது விளை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த மஞ்சுளாவை, அங்கு வந்த ராமதாஸ் ஆபாச வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது. 
இதுகுறித்த புகாரின் பேரில் ராமதாஸ் மீது நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT