விழுப்புரம்

கடத்தல் மணல் பறிமுதல்

செஞ்சி அருகே உரிய அனுமதியின்றி லாரியில் கடத்திச் செல்லப்பட்ட பார் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

DIN


செஞ்சி அருகே உரிய அனுமதியின்றி லாரியில் கடத்திச் செல்லப்பட்ட பார் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத் துறையைச் சேர்ந்த உதவிப் புவியியலாளர் மற்றும் கனிமத் துறை தனி வட்டாட்சியர் உள்ளிட்டோர், செஞ்சியை அடுத்த தும்பூர் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, அவ்வழியாக விழுப்புரம் நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் பார் மணல் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதற்கு உரிய அனுமதி பெறாததால், லாரியை ஓட்டி வந்த செஞ்சி வட்டம், துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் அருள்குமாரை (27), லாரி மணலுடன் கெடார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
கெடார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT