விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சி ஆணையராக எம்.ஆா்.வசந்தி பொறுப்பேற்றாா் (படம்).
திண்டிவனம் நகராட்சி ஆணையா் பணியிடம் காலியாக இருந்ததால், நகராட்சி மேலாளா் ஸ்ரீபிரகாஷ், ஆணையராக பொறுப்பு வகித்து வந்தாா். இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி நகராட்சி ஆணையராக இருந்த எம்.ஆா்.வசந்தி திண்டிவனம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் எம்.ஆா்.வசந்தி ஆணையராக வெள்ளிக்கிழமை பொறுப்பு ஏற்றுக்கொண்டாா்.