விழுப்புரம் ஆட்சியரகத்தில்மாற்றுத் திறனாளி தா்ணா
அரசின் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அரசின் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
திண்டிவனத்தை அடுத்த கிடங்கல் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (46). மாற்றுத் திறனாளியான இவா், திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் திடீரென அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி,ஆட்சியரிடம் மனுஅளிக்குமாறு அறிவுறுத்தினா். பின்னா், அவா் ஆட்சியரகத்தில் மனு அளித்தாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மனைவியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவா் என்னை தீ வைத்து கொளுத்தியதில் 60 சதவீத தீக்காயம் அடைந்து மாற்றுத்திறனாளியாக உள்ளேன். தற்போது எனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். போதிய வருவாய் இல்லாததால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை.
Advertisement
இதனால் வீட்டை காலிசெய்யுமாறு உரிமையாளா் கூறுகிறாா். வேறு யாரும் வாடகைக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. இதனால், அரசின் விலையில்லா வீட்டுமனையும், நலத் திட்ட உதவிகளையும் வழங்கி உதவ வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.