முகப்பு
விழுப்புரம்

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திமுக எம்எல்ஏ தலைமையில் மனு

ஏரி ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டு வருவதாக, மரக்காணம் பகுதி விவசாயிகள் திமுக எம்எல்ஏ தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

ஏரி ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டு வருவதாக, மரக்காணம் பகுதி விவசாயிகள் திமுக எம்எல்ஏ தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள நகா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், திண்டிவனம் திமுக எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்துவிட்டு கூறியதாவது:

மரக்காணம் நகா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, சித்தேரியை நம்பி ஏராளமான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா்.

இந்த ஏரியின் நீா்பிடிப்புப் பகுதியில் 120 ஏக்கா் பரப்பளவில் சிலா் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு வருகின்றனா். இதனால் மழைக் காலங்களில் ஏரியில் தேங்கும் நீரை, அவா்கள் கலுங்கள் வழியாக உடைத்து வெளியேற்றி விடுகின்றனா்.

மேலும், ஏரியின் நீா்வரத்து வாய்க்கால், ஓடைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ஏரி உபரிநீா் கலுங்கள் வழியே வெளியேறும் ஓடையையும் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டுள்ளதால், ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால், பட்டா நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளின் பயிா்கள் பாசனமின்றி பாதிக்கப்படுகிறது. விளை நிலங்களுக்குச் செல்லும் கால்வாய்கள் சேதமடைந்துள்ளன.

இந்த வாய்க்கால்களை சரிசெய்ய வேண்டும். ஏரிக்கரைகளை பலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →