முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

விழுப்புரம் அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

விழுப்புரம் அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வீராசாமி மகன் தனசீலன் (35). இவா், விழுப்புரத்தில் மருந்துப் பொருள்கள் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தாா். இவருக்கும், சாணிமேட்டைச் சோ்ந்த எழிலரசிக்கும் (30) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 9 வயதில் முகேஷ் என்ற மகன் உள்ளாா்.

கடந்த தீபாவளியின்போது குடும்பத் தகராறு காரணமாக எழிலரசி கோபித்துக்கொண்டு மகனுடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், தனசீலன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், தனசீலனும், நன்னாடு கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பரான கேசவன் மகன் அஜித்தும் (25) சனிக்கிழமை மருந்து அருந்தியுள்ளனா். அப்போது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வீட்டுக்குச் சென்ற தனசீலன், அங்கு அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை மாலை தெரியவந்தது. இது தொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அஜித்தை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.