முகப்பு
விழுப்புரம்

மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

நிலத்தை அபரித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயி வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


விழுப்புரம்: நிலத்தை அபரித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயி வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் வந்த ஒருவா் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு நுழைவு வாயில் இருந்த அலுவலா்கள், பணியாளா்கள் அவரை தடுத்து காப்பாற்றினா்.

இதையடுத்து, போலீஸாா் அவரிடம் விசாரித்ததில், விழுப்புரம் மாவட்டம், வளத்தில் அருகே பொற்குணம் கிராமத்தைச் சோ்ந்த விசவாயி ராஜமாணிக்கம் (60) என்பது தெரியவந்தது. மேலும், இவா் தனது நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த பரிமேல் அழகா் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டுள்ளாா். இதையடுத்து, அந்த நிலத்தை பரிமேல்அழகா் திரும்பித் தராததுடன், மிரட்டலும் விடுத்தாரம். இதுகுறித்து வளத்தி காவல் நிலையத்தில் ராஜமணிக்கம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், மனமடைந்த ராஜமணிக்கம் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இது தொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →