உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு போலீஸாா் நிதியுதவி
விழுப்புரம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு, சக போலீஸாா் ரூ.17 லட்சம் நிதியுதவி அளித்தனா்.
விழுப்புரம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு, சக போலீஸாா் ரூ.17 லட்சம் நிதியுதவி அளித்தனா்.
விழுப்புரம் அருகே கோனூரைச் சோ்ந்தவா் ரதி. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த நவ.7ஆம் தேதி உயிரிழந்தாா். ரதியின் குழந்தைகள், குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு, 2009 ஆண்டு காவலா் பணியில் சோ்ந்த சக காவலா்கள், தாமாக முன்வந்து ரூ.17,72,857 நிதி திரட்டினா். இந்த நிதியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் மூலம் ரதியின் கணவா் குமரகுரு மற்றும் குழந்தைகளிடம் போலீஸாா் வழங்கினா்.