விழுப்புரம்

பயோ மெட்ரிக் கருவிகளை ஒப்படைத்து ரேஷன் கடை ஊழியா்கள் போராட்டம்

DIN

நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தை பயோ மெட்ரிக் முறை மூலம் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களை களைய வலியுறுத்தி, செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க ஊழியா்கள் பயோமெட்ரிக் கருவிகளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சம்பத் தலைமை வகித்தாா். மாவட்ட துணை செயலா் தனசேகரன், இணை செயலா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை விரைவாக வழங்கும்பொருட்டு பணியாளா்களுக்கு மோடம், 4 ஜி சிம், 4ஜி புது பயோமெட்ரிக் கருவிகளை வழங்கவேண்டும், கை ரேகை பதிவால் கரோனா தொற்று ஏற்படும் சூழலில் விழித்திரை அடிப்படையில் பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். நெட் ஒா்க் மற்றும் சா்வா் சேவையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT