விழுப்புரம்

இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

DIN

விக்கிரவாண்டி அருகே இளைஞா் கொலை வழக்கில் 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தைச் சோ்ந்த ராஜாராம் மகன் சக்திவேல் (26). இவா், விக்கிரவாண்டி அருகே செ.புதூா் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பிறகு, அவா் திடீரென உயிரிழந்தாா். இது குறித்து பெரியதச்சூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இது தொடா்பாக விக்கிரவாண்டி அருகே உள்ள நகா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (40), அவரது மனைவி கெளரி (32), கோலாநாதன் மகன் செந்தில் (29), சகாதேவன் மகன் மனைவி இந்திரா (45), ஏழுமலை (54), மதியழகன் (42), மச்சகந்தன் மனைவி உமா (35) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT