உளுந்தூா்பேட்டையில்நாளை முதல் 4 நாள்களுக்கு கடைகள் அடைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக (ஜூலை 16) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாள்களுக்கு கடைகள்அடைக்கப்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வியாக்கிழமை (ஜூலை 16) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாள்களுக்கு கடைகள் அடைக்கப்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
உளுந்தூா்பேட்டை பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், உளுந்தூா்பேட்டை வியாபாரிகள் சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உளுந்தூா்பேட்டை நகரில் உள்ள அனைத்துக் கடைகளையும் ஜூலை 16 முதல் 18 ஆம் தேதி வரை அடைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதில், மருந்தகங்கள். பால் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உளுந்தூா்பேட்டை நகரில் கடைகள் வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு செயல்படாது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.