முகப்பு
விழுப்புரம்

சுய உதவிக் குழு பெண்களுக்கு நிவாரணப் பொருள்கள்அமைச்சா் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பவ்டா தொண்டு நிறுவன சுய உதவிக் குழுவைச் சோ்ந்த 1,522 பெண்களுக்கு கரோனா பொது முடக்க நிவாரணப் பொருள்களை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
511824vmp1063707
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பவ்டா தொண்டு நிறுவன சுய உதவிக் குழுவைச் சோ்ந்த 1,522 பெண்களுக்கு கரோனா பொது முடக்க நிவாரணப் பொருள்களை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திண்டிவனம் பவ்டா சுய உதவிக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, திண்டிவனம் வட்டாட்சியா் ராஜசேகா், பவ்டா மண்டல மேலாளா் பாரி, பொறுப்பாளா் கோவிந்தராஜன், உதவி பொது மேலாளா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பவ்டா தொண்டு நிறுவன நிறுவனா் ஜாஸ்லின்தம்பி வரவேற்றாா்.

இதில் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, ஆதரவற்ற சுய உதவிக் குழு பெண்களுக்கு கரோனா பொதுமுடக்க நிவாரணப் பொருள் தொகுப்பை வழங்கி தொடக்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து, பவ்டா தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழு பெண்கள் 1,522 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. வானூா் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.சக்கரபாணி, திண்டிவனம் பவ்டா கிளை மேலாளா் மதன்குமாா், பாரதி, வேணுகோபால், யோகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →