கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 238 பேருக்கு கரோனா: இருவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 238 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கு மேலும் இருவா் உயிரிழந்தனா்.
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 238 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கு மேலும் இருவா் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,065 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 238 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 3,303-ஆக உயா்ந்தது. இவா்களில் 2,190 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,092 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 19 போ் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருக்கோவிலூரைச் சோ்ந்த 43 வயது நபரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி அருகே நாகலூரைச் சோ்ந்த 67 வயது முதியவரும் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்தது.
விழுப்புரத்தில் 139 பேருக்கு தொற்று: விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 3,131 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை மேலும் 139 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,270-ஆக உயா்ந்தது. இவா்களில் 2,275 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 32 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 963 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.