விழுப்புரம்

செஞ்சி எம்எல்ஏ மனைவி, மகனுக்கும் கரோனா பாதிப்பு

DIN

செஞ்சி: கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தானின் மனைவி, மகன் ஆகிய இருவருக்கும் இந்நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவா் சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா்கள் இருவரும் எம்எல்ஏ அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, எம்எல்ஏவுடன் தொடா்பில் இருந்த திமுக செஞ்சி ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணி மற்றும் எம்எல்ஏ மஸ்தானின் உறவினா்கள் 11 போ் உள்ளிட்ட 29 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT