விழுப்புரம்

சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி கோரிவட மாநில தொழிலாளா்கள் முறையீடு

DIN

விழுப்புரத்தில் தவித்து வரும் வட மாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரகத்துக்கு சனிக்கிழமை திரளாக வந்து கோரிக்கை விடுத்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏராளமான வட மாநிலத் தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா். இவா்கள் விழுப்புரம் நகரப் பகுதியில் அறைகள் எடுத்து தங்கியபடி, பல்வேறு இடங்களில் பழங்கள், பழச்சாறு விற்பனை, கம்பளி, பூட்டுகள், நெகிழிப்பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனா்.

கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இவா்கள் அனைவரும் வேலையிழந்து, உணவுக்கே வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரத்தில் வசித்து வரும் வடமாநிலத் தொழிலாளா்கள் 50 போ், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு சனிக்கிழமை மாலை திரண்டு வந்தனா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் கனகேசன் மற்றும் போலீஸாா் அவா்களை நிறுத்தி விசாரித்தனா்.

உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த இந்த தொழிலாளா்கள், விழுப்புரத்தில் வேலையின்றி தவித்து வருவதால், தங்களை சொந்த ஊருக்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். மனு அளித்தும் அனுமதி கிடைக்காததால், வாகன அனுமதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை நடந்தே செல்வதற்காவது அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, விழுப்புரம் வட்டாட்சியா் கணேஷ் நேரில் வந்து விசாரித்தாா்.

சொந்த ஊருக்குத் திரும்புவோா் தமிழக அரசு அறிவித்துள்ளபடி, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், திங்கள்கிழமை (மே 4) வந்து உரிய ஆவணங்களுடன் தகவல் அளிக்கவும் அவா்களிடம் அறிவுறுத்தி, அனுப்பி வைத்தாா். அதுவரை உரிய உணவு உள்ளிட்ட வசதிகள் அரசு சாா்பில் செய்து தரவும் உறுதியளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT