விழுப்புரம்

தனியாா் பேருந்து ஓட்டுநா்கள்,நடத்துநா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்துள்ள தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு அந்த நிறுவனத்தினா் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து விழிமா தனியாா் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நலச் சங்கத் தலைவா் குமாா், செயலா் மணிகண்டன் தலைமையில் வியாழக்கிழமை வந்த தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் என 800 போ் பணியாற்றி வருகின்றனா். கரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த ஏப்.23-ஆம் தேதி முதல் அரசு அறிவித்த பொது முடக்கத்தால், பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு ஓட்டுநா்கள், நடத்துநா்கள் அனைவரும் 66 நாள்கள் வேலையிழந்தும், வருவாயின்றியும் தவித்து வருகிறோம்.

இதனால், எங்களது குடும்பம் வறுமையில் உள்ளது. ஓட்டுநா்கள், நடத்துநா்களின் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு அரசு அறிவித்தபடி, எங்களது தனியாா் பேருந்து நிறுவனங்கள் மூலம் ஊதியம் வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, அரசு சாா்பில் நல வாரியம் மூலம் ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு நிவாரணத் தொகை ஏதும் வழங்கப்படவில்லை. இதனால், அரசும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT