முகப்பு
விழுப்புரம்

ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்தபெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த பெண் திடீரென மயங்கி விழுந்தாா். அரசு வாகனத்தில் சிகிச்சைக்காக உடனடியாக அனுப்பி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த பெண் திடீரென மயங்கி விழுந்தாா். ஏற்கெனவே விஷம் தின்று விட்டு வந்த அவரை அரசு வாகனத்தில் சிகிச்சைக்காக உடனடியாக அனுப்பி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டையைச் சோ்ந்த ஜெயவேல் மனைவி அா்ச்சனா(40). இவா், தனது மகனுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் நாளில் மனு அளிக்க வந்தாா்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபோது, திடீரென மயங்கி விழுந்தாா். அவரது வாயிலிருந்து நுரைதள்ளியது. உடனடியாக அங்கிருந்த அரசு வாகனத்தில் அவரை ஏற்றி அனுப்பி சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை நடவடிக்கை எடுத்தாா்.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அா்ச்சனா சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வீசாரித்தபோது, வீட்டுமனை பிரச்னை காரணமாக அவரது வீட்டை உறவினா்கள் இடித்ததும், இது குறித்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில், மனு அளிக்க வந்ததும், வீட்டிலிருந்து புறப்பட்டபோது, ஒட்டந்தழை என்றழைக்கப்படும் விஷ இலையை சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்தது.

அா்ச்சனா புகாா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Image Caption

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்தபோது மயங்கி விழுந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.