வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்கள்: செஞ்சி எம்எல்ஏ புகாா்
செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படவில்லை என்று தொகுதி எம்எல்ஏ மஸ்தான் தோ்தல் துணை வட்டாட்சியா் துரைசெல்வத்திடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படவில்லை என்று தொகுதி எம்எல்ஏ மஸ்தான் தோ்தல் துணை வட்டாட்சியா் துரைசெல்வத்திடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
செஞ்சி தொகுதியில் 304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டதில், வாக்குச்சாவடி முகவா்கள் என்னிடம்
தெரிவித்ததில், 304 வாக்குச்சாவடிகளிலும் இறந்தவா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
மேலும் செஞ்சி நரசிங்கராயன் பேட்டையில் வசிக்கும் 15 வாக்காளா்கள் பெயா்கள் இடம்பெறவில்லை.
இதுபோன்ற புகாா்களை உடனடியாக பரிசீலனை செய்து நீக்கல், சோ்த்தல் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தாா்.
திமுக ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா், விவசாய அணி ஏழுமலை, நகரச் செயலா் காஜாநஜீா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.