விழுப்புரம்

பேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி

DIN

பேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்து வரும் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சேர்ந்த பேரறிவாளன், தற்போது பரோலில் வெளியே வந்து வீட்டில் தங்கியுள்ளார்.
 இவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் வயிற்று பிரச்னை உள்ளதால், இவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சனிக்கிழமை மாலை மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 இவர் இரு தினங்கள், இந்த மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற உள்ளதாகவும், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.
 இவருடன் அவரது தாயார் அற்புதம்மாள் வந்திருந்தார். இதனால் அந்த மருத்துவமனையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

தலைமைச் செயலகத்தில் ஸ்ரேயா!

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

மும்பை விபத்து: விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்!

கலால் வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT