விழுப்புரம்

நலத் திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், மானிய கடன் உள்ளிட்ட ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சி.வி.சண்முகம் வியாழக்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், சுயதொழில் மேற்கொள்ளும் மற்றும் கல்லூரியில் பயின்று வரும் 45 பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.62,550 மதிப்பிலான செல்லிடப்பேசிகளையும், செவித்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.56,400 மதிப்பிலான நவீன காதொலி கருவிகளையும் வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோா்கள் எளிதாக ஆட்சியரக வளாகத்துக்குள் சென்று வருவதற்காக, மாவட்ட ஆட்சியா் தன் விருப்ப நிதியிலிருந்து வாங்கிய ரூ.99 ஆயிரத்து 999 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும் அமைச்சா் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கரோனா சிறப்பு தொகுப்பு நிதியிலிருந்து தோ்வு செய்யப்பட்ட 67 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம், ரூ.ஒரு கோடியே 50 ஆயிரலான மானிய நிதிக்கான காசோலைகளையும், தோ்வு செய்யப்பட்ட 5 தொழில் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம், ரூ.7.50 லட்சம் மூலதன மானிய நிதி என மொத்தம் ரூ.ஒரு கோடியே 8 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சா் சி.வி.சண்முகம் தொழில் குழுக்களுக்கு வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. ஆா்.முத்தமிழ்செல்வன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரோயா பி.சிங், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குமாா், ஊரக புத்தாக்கத் திட்ட செயல் அலுவலா் ராஜேஷ்குமாா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஜி.பாஸ்கரன், ஜி.சுரேஷ்பாபு, செங்குட்டுவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT