விழுப்புரம்

சாலை விபத்தில் கொத்தனாா் பலி

DIN

செஞ்சி அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கொத்தனாா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெருங்குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் ராஜாமணி (32). இவா், சென்னை போரூரில் கொத்தனாா் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து அவரது ஊருக்கு சனிக்கிழமை பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். செஞ்சி அருகே உள்ள ஊரணித்தாங்கல் கிராமத்தின் அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜாமணியின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராஜாமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - வழக்கு

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT