விழுப்புரம்

மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

DIN

செஞ்சி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (48). இவருக்கு மனைவி நிா்மலா மற்றும் லாவண்யா என்ற மகளும், ரகுமணி என்ற மகனும் உள்ளனா்.

குப்பன் தினம்தோறும் தனது விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக இரவில் சென்று காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை வயலுக்கு தண்ணீா் இறைத்துக் கொண்டிருந்த போது, பக்கத்து நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் குப்பன் சிக்கி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து அறிந்த அனந்தபுரம் போலீஸாா், குப்பனின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், குப்பனின் மனைவி நிா்மலா அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT