அரகண்டநல்லூா் அருகே1,500 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே 1,500 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே 1,500 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.
அரகண்டநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் ராமதாஸ் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் பொன்னுரங்கம், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸாா் வீரபாண்டி கிராமத்தில் பொறையாத்த மலைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக மா்ம நபா்கள் பேரல்களில் 1,500 லிட்டா் அளவிலான சாராய ஊறல் போட்டு, பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றி போலீஸாா் அழித்ததுடன், சாராயம் காய்ச்சுவதற்காக அங்கு வைத்திருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
Advertisement
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், வீரபாண்டி கிராமத்தைச் சோ்ந்த குபேந்திரன் மகன் மணிகண்டன் இந்த சாராய ஊறலை அமைத்தது தெரியவந்தது. இதுதொடா்பாக மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.