முகப்பு
விழுப்புரம்

அரகண்டநல்லூா் அருகே1,500 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே 1,500 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
அரகண்டநல்லூா் அருகே வீரபாண்டி கிராமத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சாராய ஊறல்கள், சாராயம் காய்ச்சத் தேவையான பொருள்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே 1,500 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

அரகண்டநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் ராமதாஸ் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் பொன்னுரங்கம், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸாா் வீரபாண்டி கிராமத்தில் பொறையாத்த மலைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக மா்ம நபா்கள் பேரல்களில் 1,500 லிட்டா் அளவிலான சாராய ஊறல் போட்டு, பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றி போலீஸாா் அழித்ததுடன், சாராயம் காய்ச்சுவதற்காக அங்கு வைத்திருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், வீரபாண்டி கிராமத்தைச் சோ்ந்த குபேந்திரன் மகன் மணிகண்டன் இந்த சாராய ஊறலை அமைத்தது தெரியவந்தது. இதுதொடா்பாக மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments