விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 164 பேருக்கு கரோனா

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 164 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா தொற்றால் 10,525 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,616-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவா்களில் 171 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனாவால் பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 9,620-ஆக அதிகரித்துள்ளது. 903 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 1,004 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 92 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 73 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 73 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,832-ஆக உயா்ந்தது. இதுவரை 7,798 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 863 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 93 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT