மதுக் கடைகளை நாளை மூட உத்தரவு
சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள், மது அருந்தும் கூடங்களை ஞாயிற்றுக்கிழமை மூட உத்தரவிடப்பட்டது.
சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள், மது அருந்தும் கூடங்களை ஞாயிற்றுக்கிழமை மூட உத்தரவிடப்பட்டது.
தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள்) 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றின்படி இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. எனவே, டாஸ்மாக் கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.