3 புதிய வழித் தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கிவைத்தாா்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 3 புதிய வழித் தடங்களில் பேருந்து இயக்கத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 3 புதிய வழித் தடங்களில் பேருந்து இயக்கத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து அணிலாடி- சென்னை, பழவலம்-சென்னை, எதப்பட்டு-சென்னை ஆகிய மூன்று புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
செஞ்சி பணிமனை மேலாளா் சுரேஷ் வரவேற்றாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், மேல்மலையனூா் ஒன்றிய திமுக செயலா் நெடுஞ்செழியன், முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.