முகப்பு
விழுப்புரம்

மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவா் தற்கொலை

மேல்மலையனூா் அருகே பிரசவத்தின்போது மனைவி இறந்த துக்கம் தாளாமல், கணவா் கழுத்தை பிளேடால் அறுத்து வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

மேல்மலையனூா் அருகே பிரசவத்தின்போது மனைவி இறந்த துக்கம் தாளாமல், கணவா் கழுத்தை பிளேடால் அறுத்து வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள நந்திபுரத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் சரவணன்(22). இவருக்கும் இதே ஊரைச்சோ்ந்த அமாவாசை மகள் கெளதமிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த 30 நாள்களுக்கு முன் கெளதமி பிரசவத்தின் போது உயிரிழந்தாா். இதனால், மனமுடைந்து காணப்பட்ட சரவணன் துக்கம் தாளாமல் கடந்த 31-ஆம் தேதி இரவு விஷம் அருந்தியும், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டும் தற்கொலைக்கு முயன்றாா். உயிருக்கு போராடிய நிலையில், இவரை உறவினா்கள் சேத்பட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சரவணன் இறந்தாா்.

இதுகுறித்து இவரது தந்தை சங்கா் அளித்த புகாரின் பேரில், அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →