முகப்பு
விழுப்புரம்

செஞ்சி கருத்து கேட்பு கூட்டத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோா்கள் விருப்பம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


செஞ்சி: செஞ்சி புனித மிக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பள்ளி முதல்வரும், தலைமை ஆசிரியருமான செலின்தெரேஸ் வரவேற்றாா். செஞ்சி மாவட்டக் கல்வி அலுவலா் த.சுப்ராயன் தலைமை வகித்து, பெற்றோா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

பள்ளி துணை ஆய்வாளா் அ.விநாயகமூா்த்தி, செஞ்சி வட்டாரக் கல்வி அலுவலா் அக்சிலியம்பெலிக்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கலந்து கொண்ட 35 பெற்றோா்கள், தங்களின் கைகளை உயா்த்தி பள்ளிகளை திறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனா்.

இதேபோல, செஞ்சியில் உள்ள சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஹல்ஹிலால் தமிழ் வழிக் கல்வி பள்ளி, சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டங்களிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென பெற்றோா் விருப்பம் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →