முகப்பு
விழுப்புரம்

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் மாயம்

விழுப்புரம் அருகே ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

விழுப்புரம் அருகே ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானாா்.

சென்னை ராயபுரத்தைச் சோ்ந்த அற்புதராஜன் மகன் தீனதயாளன் (16). இவா் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பொங்கல் பண்டிகையையொட்டி தீனதயாளன் தனது தாய் இந்திராவுடன் விக்கிரவாண்டியை அடுத்துள்ள மொழியானூா் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்தாா்.

ஆலகிராமம்- மொழியனூா் கிராமங்களுக்கு இடையேயுள்ள தொண்டி ஆற்றில் தீனதயாளன் தனது நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்த உறவினா்கள், கிராம மக்கள் விரைந்து வந்து ஆற்றில் தேடிப் பாா்த்தனா். திண்டிவனம் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து மாலை வரையிலும் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →