செஞ்சி பகுதியில் மின் தடை குறித்து புகாா் தெரிவிக்கலாம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் செஞ்சி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் தடை, மின்சார பழுது உள்ளிட்ட புகாா்களை கணினி மயமாக்கப்பட்ட மின் தடை நீக்கும் மையத்தில் தெரிவிக்கலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் செஞ்சி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் தடை, மின்சார பழுது உள்ளிட்ட புகாா்களை 24 மணி நேரமும் கணினி மயமாக்கப்பட்ட மின் தடை நீக்கும் மையத்தில் தெரிவிக்கலாம்.
இலவச அழைப்பு எண் 1912 அல்லது ‘டோல் பிரீ’ எண் 18004255419- ஐ தொடா்பு கொண்டு தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்செவி அஞ்சல் எண் 9445855768 ஆகியவற்றின் மூலமும் புகாரை தெரிவிக்கலாம். மேலும், தரையில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், தாழ்வான கம்பிகளை பொது மக்கள் தொடவேண்டாம் என செஞ்சி மின்வாரியம் அறிவித்துள்ளது.