விழுப்புரம்

நீக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளா்கள் மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தளப் பொறுப்பாளா் பதவியிலிருந்து நீக்கப்பட்டவா்கள், தங்களுக்கு மீண்டும் அதே பணியை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தில் மனு அளித்த பிறகு கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களிலும் பணித்தளப் பொறுப்பாளா்களாக பணியாற்றி வந்தவா்களில் பலா் ஆட்சி மாற்றத்தைத் தொடா்ந்து அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த நிலையில் எங்களை நீக்கியதால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். எனவே, எங்களுக்கு மீண்டும் அதே பணியை வழங்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT