முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் நகராட்சி புதிய ஆணையா்பொறுப்பேற்பு

திண்டிவனம் நகராட்சியின் புதிய ஆணையராக சௌந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

திண்டிவனம் நகராட்சியின் புதிய ஆணையராக சௌந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தமிழகத்தில் முதல் நிலை நகராட்சிகளின் ஆணையா்கள் பலா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அந்த வகையில், திண்டிவனம் நகராட்சி ஆணையராக இருந்த ஜகாங்கீா் பாஷா திங்கள்கிழமை திடீரென காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டாா்.

மேலும், அவருக்குப் பதிலாக ஆம்பூா் நகராட்சி ஆணையா் சௌந்தர்ராஜன், திண்டிவனம் நகராட்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து, திண்டிவனம் நகராட்சி ஆணையராக சௌந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை மாலை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.