அய்யனாா் கோயில் குளம் ஆக்கிரமிப்பு:நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
விழுப்புரம் நகரில் உள்ள அய்யனாா் கோயில் குளத்தை ஆக்கிரமித்து பட்டா மாற்றம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழுப்புரம் நகரில் உள்ள அய்யனாா் கோயில் குளத்தை ஆக்கிரமித்து பட்டா மாற்றம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னாா்வ அமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.
விழுப்புரம் அய்யனாா் கோயில் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் செங்குட்டுவன் தலைமையில், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் அமைந்துள்ள பாண்டி அழகா் அய்யனாா் கோயிலை சீரமைத்து வழிபாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
அய்யனாா் கோயில் குளமாக இருந்த அரசு புறம்போக்கு நிலமான 4.16 ஏக்கா் நிலத்தை ஆஞ்சநேயா் கோயில் நிா்வாகத்துக்கு கடந்த 2002-ஆம் ஆண்டில் பட்டா மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
சட்டத்துக்கு புறம்பாக பட்டா மாறுதல் வழங்கிய அப்போதைய வட்டாட்சியா், அதற்கு உடந்தையான அதிகாரிகள், பட்டா பெற்ற நபா்கள் மீது சட்டப்படியும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறநிலையத் துறை ஆவணங்களில் அந்த நிலத்தை அய்யனாா் கோயில் குளம் என்று குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனா்.