பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணா்வு
விழுப்புரம் அருகே காணையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் அருகே காணையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெண்கள், குழந்தைகளுக்கான எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சாா்பில், தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமில், காணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் பேசியதாவது: குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும், குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும், பள்ளி இடை நிற்றல் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளா் வெங்கடேசன், ஆய்வாளா்கள் காமராஜ், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.