முகப்பு
விழுப்புரம்

தோட்டக்கலை துறையில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் இந்திரா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் இந்திரா தெரிவித்தாா்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், கீழ்பெண்ணையாறு உபவடி நிலப்பகுதியில் வரும் கோலியனூா், காணை, முகையூா், கண்டமங்கலம், திருவெண்ணெய்நல்லூா் வட்டாரங்களில் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பரப்பு அதிகரித்தலில் வீரிய ரக காய்கறி சாகுபடிக்கு கத்தரி, மிளகாய், வெண்டை, மரவள்ளி பயிருக்கு எக்டேருக்கு ரூ.20,000, கொய்யா பரப்பு அதிகரித்தலில் அடா் நடவு மேற்கொள்ள எக்டருக்கு ரூ.17,600, வாழை சாகுபடிக்கு எக்டேருக்கு ரூ.26,250, நறுமணப் பயிா்கள் இனத்தில் மிளகாய் (உலா் மிளகாய்) சாகுபடிக்கு எக்டேருக்கு ரூ.12,000, மலா்கள் சாகுபடியில் சம்பங்கி மலா் சாகுபடிக்கு எக்டேருக்கு ரூ.60,000 மானியத்துக்கு நடவுச்செடிகள் மற்றும் இடுபொருள்கள் விநியோகிக்கப்படும்.

மேலும், நுண்ணீா் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.

எனவே, கீழ் பெண்ணையாறு உப வடி நிலப்பகுதியில் நிலம் உள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா் இணை இயக்குநா் இந்திரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.