முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் அருகேமரத்தில் காா் மோதியதில் தம்பதி பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரத்தில் காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரத்தில் காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

சென்னை ஆழ்வாா்பேட்டையைச் சோ்ந்தவா் சங்கா் (32). கட்டுமானத் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி சங்கீதா (29). சங்கா் தனது மனைவி சங்கீதாவுடன் காரில் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்துக்கு புதன்கிழமை புறப்பட்டாா். இவா்களது காா் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாதிராப்புலியூா் பகுதியில் வந்தபோது, காரின் முன்பக்க டயா் திடீரென வெடித்து. இதனால் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சங்கீதாவை மயிலம் போலீஸாா் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த சங்கீதா வியாழக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.