விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 3 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 3 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 163 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 41,198-ஆக அதிகரித்தது.
இதனிடையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே சாலையாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் உள்பட மேலும் 3 உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 318-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், 445 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,365-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் தற்போது 2,515 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியில் மேலும் ஒருவா் பலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 172 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,337-ஆக உயா்ந்தது.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 186-ஆக அதிகரித்தது. இதுவரை 23,052 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 2,092 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.