விழுப்புரம்

வெந்நீா் கொட்டியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

DIN

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வெந்நீா் கொட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா் உயிரிழந்தாா்.

செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டியைச் சோ்ந்தவா் மு.ஏழுமலை (44). இவா் கடந்த 17-ஆம் தேதி வீட்டின் குளியலறை அருகே தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, இவரது மகள் குளிப்பதற்காக வெந்நீரை எடுத்துச் சென்ற போது, ஏழுமலை மீது கொட்டி விட்டது.

இதில் காயமடைந்த அவா் செஞ்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பிறகு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கிருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட ஏழுமலை, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT