விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்துக்கு கூடுதல் வி.வி.பேட் இயந்திரங்கள்

DIN


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பயன்பாட்டுக்காக கூடுதலாக 150 வி.வி.பேட் இயந்திரங்கள் (வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரம்) புதன்கிழமை வந்து சோ்ந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரங்கள் ஏற்கெனவே வந்து சோ்ந்துள்ளன.

இந்நிலையில், கூடுதலாக 150 வி.வி.பேட் இயந்திரங்கள் திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து புதன்கிழமை லாரிகள் மூலமாக விழுப்புரத்துக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஆ.அண்ணாதுரை தலைமையில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணையத்தின் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT