முகப்பு
விழுப்புரம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சா் ஆய்வு

செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை மிக தீவரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி, நாட்டாா்மங்கலத்தில் உள்ள ராஜாதேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ராஜீவ் காந்தி அரங்கத்தில் அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சை சிறப்பு மையத்தில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தாா்.

செஞ்சி ஒன்றியம், நல்லாண்பிள்ளைபெற்றாள், கெங்கவரம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.

காய்ச்சல் அதிகமுள்ள கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின் போது செஞ்சி வட்டாட்சியா் ராஜன், டிஎஸ்பி இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலா்கள் மலா்விழி, சதீஷ், சூரியபிரபா, பாக்கியலட்சுமி, துரியோதனன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.